இந்தியாவில் புதிதாக 8,895 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : 2,796 பேர் கொரோனாவால் உயிரிழப்பு
Dec 5 2021 1:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் புதிதாக 8 ஆயிரத்து 895 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது - மேலும் 2 ஆயிரத்து 796 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் கடந்த காலத்தில் கணக்கில் வராத 2 ஆயிரத்து 426 கொரோனா மரணங்கள் இன்றைய பலி எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. அதேபோல் கேரள மாநிலத்தில் கணக்கில் வராத 263 உயிரிழப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 796 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 99 ஆயிரத்து 155 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.