தான்சானியா நாட்டிலிருந்து டெல்லி வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி - இந்தியாவில் இதுவரை 5 பேருக்கு ஒமைன்ரான் தொற்று பாதிப்பு
Dec 5 2021 12:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடகா, குஜராத், மகாராஷ்ட்ரா மாநிலங்களை தொடர்ந்து, டெல்லியிலும் ஒமைக்ரான் கொரோனா தொற்று பரவியுள்ளது.
ஆப்பிரிக்காவின் தென்பகுதியில் உள்ள போஸ்வானாவிலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் கொரோனா தொற்று, உலகில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவிலும் ஒமைக்ரான் கொரோனா வைரஸ் ஊடுருவியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். நேற்று குஜராத் மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலங்களில் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது டெல்லியில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தான்சானியாவிலிருந்து வந்தவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.