கர்நாடகாவிலிருந்து லாரியில் கடத்திய குட்கா : 75 மூட்டை குட்காவை பறிமுதல் செய்த போலீசார்
Dec 5 2021 10:46AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடகாவிலிருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்காவை, குன்னூர் அருகே போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பர்லியாறு சோதனைச் சாவடியில், கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கர்நாடகாவிலிருந்து இளநீர் மட்டைகளை ஏற்றி வந்த லாரியில் சோதனையிட்டனர். அதில், குட்கா இருப்பது தெரியவந்தது. உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகள், 75 மூட்டைகளில் இருந்த 8 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்தனர்.