போக்சோ சட்டத்தில் பதியப்பட்ட வழக்குகளை, சம்பந்தப்பட்ட இருதரப்பினர் சமரசத்தால் ரத்து செய்ய முடியுமா? - ஆராய இருப்பதாக உச்ச நீதிமன்றம் தகவல்

Dec 5 2021 10:35AM
எழுத்தின் அளவு: அ + அ -

போக்சோ சட்டத்தில் பதியப்பட்ட வழக்குகளை, சம்பந்தப்பட்ட இருதரப்பினர் சமரசத்தால் ரத்து செய்ய முடியுமா என்பது தொடர்பாக ஆராய இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் கல்வி நிறுவனம் ஒன்றில், ஆசிரியர் ஒருவர் மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக எழுந்த புகாரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை நடந்து வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவருடன் சமரசம் ஏற்பட்டதாக, மாணவியின் தாயார் எழுத்துப்பூர்வ கடிதம் அளித்ததாக, காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்று கேரள உயர்நீதிமன்றம் போக்சோ வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், போக்சோ வழக்கை இருதரப்பினரின் சமரசத்தின் அடிப்படையில் ரத்து செய்ய முடியுமா என்பது தொடர்பாக ஆராய வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00