விவசாயிகள் போராட்டத்தின் போது உயிர்த்தியாகம் செய்த 700 பேரின் குடும்பங்களுக்கு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வலியுறுத்தல்
Dec 3 2021 6:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விவசாயிகள் போராட்டத்தின் போது உயிர் தியாகம் செய்த 700 விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி திரு.ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய திரு.ராகுல் காந்தி, போராட்டத்தில் உயிரிழந்த 152 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீட்டை பஞ்சாப் அரசு தந்துள்ளது எனவும், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களைச் சேர்ந்த ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் பஞ்சாப் அரசு உறுதியளித்துள்ளது எனவும் கூறினார். ஆனால், வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்தி தவறு செய்ததாக மன்னிப்புக்கோரிய பிரதமர் நிவாரணம் தரமறுப்பது ஏன் என அவர் கேள்வி எழுப்பினார். உயிரிழந்த விவசாயிகளுக்கு மத்திய அரசு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என வேதனை தெரிவித்த திரு.ராகுல் காந்தி, போராட்டக் களத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பங்களுக்கு இழப்பீடு தரும் திட்டம் இல்லை என்பதற்கு கண்டனம் தெரிவித்தார்.