புதுச்சேரி: சின்ன வீராம்பட்டினத்தில் பட்டாசு தொழிற்சாலையில் போலீசார் ஆய்வு
Oct 19 2021 7:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியை அடுத்த சின்ன வீராம்பட்டினம் பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளை, தெற்குப் பகுதி காவல் கண்காணிப்பாளர் விஷ்ணுகுமார் தலைமையில் அரியாங்குப்பம் போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், பட்டாசு தயாரிப்பில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டது. மேலும் இத்தொழிற்சாலையில் பாதுகாப்பு அம்சங்களான தண்ணீர், மணல் மற்றும் தீயணைப்பு சாதனங்கள் உரிய முறையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு செய்தனர்.