புதுச்சேரி: மகனின் இறுதி சடங்கின்போது தந்தை உயிரிழந்த சம்பவம்
Oct 19 2021 7:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில், உடல்நலக் குறைவால் மகன் உயிரிழந்த சோகத்தில், மகனின் இறுதி சடங்கின் போது தந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி அய்யங்குட்டிபாளையத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகன் ராஜனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. புதுச்சேரி அரசு மருத்துவமனையில் பலனின்றி அவர் உயிரிழந்தார். ராஜனின் இறுதிச்சடங்கு நேற்று காலை வீட்டில் நடந்தபோது, பெரியசாமிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து கதிர்காமம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே பெரியசாமி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.