பாகிஸ்தானுடன் இந்திய அணி கிரிக்கெட் விளையாடுவது சரி அல்ல -ஆம்ஆத்மி
Oct 19 2021 3:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாகிஸ்தானுடன் இந்திய அணி கிரிக்கெட் விளையாடுவது சரி அல்ல என்று ஆம்ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் அதிஷி தெரிவித்துள்ளார். காஷ்மீரில் அப்பாவி பொதுமக்கள் மீது தீவிரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்கள் திட்டமிட்டு நடத்தப்படுவதால், இதுபோன்ற சூழ்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்ய வேண்டும் என அதிஷி தெரிவித்துள்ளார். டி20 உலகக்கோப்பை போட்டித் தொடரில், வரும் 24-ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.