தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு தீபாவளியை கொண்டாடுங்கள் -தமிழிசை சௌந்தரராஜன்
Oct 19 2021 3:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தீபாவளிக்கு முன் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு பண்டிகையை பாதுகாப்புடன் கொண்டாடுங்கள் என துணைநிலை ஆளுநர் திருமதி. தமிழிசை சௌந்தர்ராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.
புதுச்சேரி வில்லியனூர் அருகே மேல்சாத்தமங்கலம் பகுதியில் உள்ள அரசு தொடக்க பள்ளியில், கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விரைவில் புதுச்சேரி 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்ட மாநிலமாக மாறும் என்றும், தீபாவளி பண்டிகையை தடுப்பூசி போட்டு பயமில்லாமல் கொண்டாடுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.