கேரளாவில் பெய்துவரும் கன மழையால் இடுக்கி அணையிலிருந்து 3 ஆண்டுகளுக்கு பின்னர் தண்ணீர் திறப்பு - விநாடிக்கு ஒரு லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்படலாம் என தகவல்
Oct 19 2021 12:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் பெய்துவரும் கன மழையால் இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான இடுக்கி அணையிலிருந்து 3 ஆண்டுகளுக்கு பின்னர் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. விநாடிக்கு ஒரு லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
கேரள மாநிலம் இடுக்கி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் இடுக்கி அணை நிரம்பி வருகிறது. 3 தினங்களுக்கு முன்பு இடுக்கி அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இதனால் அணையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையான Blue Alert விடுக்கப்பட்டது. பின்னர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 5 ஆயிரத்து 450 கன அடியாக அதிகரித்து, நீர்மட்டம் மேலும் உயர்ந்ததால், இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையான Orange Alert விடுக்கப்பட்டது. இந்நிலையில், இடுக்கி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்ததால், அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையான Red Alert விடுக்கப்பட்டுள்ளது. மேலும், 2018-ம் ஆண்டு பெருமழைக்கு பின்னர், தற்போது இடுக்கி அணை திறக்கப்பட்டுள்ளது.
இடுக்கி அணையிலிருந்து முதற்கட்டமாக விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக உயர்த்தப்பட்டு, 1 லட்சம் கனஅடி வரை திறக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இடுக்கி அணை திறக்கப்பட்டதையடுத்து, இடுக்கி மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.