காஷ்மீரில் அதிகரிக்கும் பொதுமக்கள் மீதான தீவிரவாத தாக்குதல் : நாட்டின் பாதுகாப்பு குறித்து அமித்ஷா முக்கிய ஆலோசனை
Oct 19 2021 12:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஷ்மீரில் பொதுமக்கள் மீதான தீவிரவாத தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் பாதுகாப்பு குறித்து, உயர் காவல்துறை அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 2 வாரங்களில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இது அங்குள்ள மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காணொலி வாயிலாக 6 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இக்கூட்டத்தில், காவல்துறை உயரதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், உள்நாட்டு பாதுகாப்பில் போலீசார் எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்தும், அவற்றை எதிர்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.