கேரளாவில் பெய்துவரும் கன மழைய எதிரொலி - இடுக்கி அணைக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
Oct 19 2021 1:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் பெய்துவரும் கன மழையால் இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான இடுக்கி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இடுக்கி அணையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் இடுக்கி அணை நிரம்பி வருகிறது. 3 தினங்களுக்கு முன்பு இடுக்கி அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இதனால் அணையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையான Blue Alert விடுக்கப்பட்டது. இந்நிலையில் இடுக்கி அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடரும் மழையால் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 5 ஆயிரத்து 450 கன அடியாக அதிகரித்து, நீர்மட்டம் மேலும் உயர்ந்தது. இதனால் இடுக்கி அணையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையான Orange Alert விடுக்கப்பட்டுள்ளது.
இடுக்கி அணை நீர்மட்டம் 2 ஆயிரத்து 397 கன அடியாக உயரும் பட்சத்தில் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையான Red Alert விடுக்கப்படும் என்றும், நீர்மட்டம், 2 ஆயிரத்து 398 கன அடியாக அதிகரித்தால், அணை திறக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.