பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில் மக்களின் பணம் பலவந்தமாக பறிக்கப்படுகிறது - மத்திய அரசு மீது ராகுல் காந்தி கடும் விமர்சனம்

Oct 19 2021 1:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில் பொதுமக்களின் பணம் பலவந்தமாக பறிக்கப்படுவதாக திரு. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, தீவிர பிரச்சனையாக மாறி வருவதாக திரு. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், விமானங்களுக்கான எரிபொருளை விட பெட்ரோல் அதிக விலைக்‍கு விற்கப்படுவது குறித்த ஊடக செய்தியை சுட்டிக்காட்டியுள்ளார். ஹவாய் சப்பல் அணிவோர் கூட விமானத்தில் பறக்கிறார்கள் என மத்திய பா.ஜ.க. அரசு கூறி வந்த நிலையில், சாலையில் கூட செல்ல முடியாத நிலைக்‍கு மக்‍கள் தள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். பிரதமர் திரு. மோடி, தனது நண்பர்களுக்‍கு மட்டுமே சாதகமாக நடந்து கொள்வதாகவும், பொதுமக்‍களை கண்டுகொள்வதில்லை என்றும் விமர்சித்துள்ளார். ஆனால், மக்‍களுக்‍காக, தான் குரல் எழுப்பிக்‍ கொண்டே இருப்பேன் என்று திரு. ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00