புதுச்சேரி அரசின் நிர்வாகம் முற்றிலுமாக முடங்கிப்போயுள்ளது - ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் அரசு மீது முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு
Oct 19 2021 1:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி அரசு நிர்வாகம் முற்றிலும் முடங்கியிருப்பதாக முன்னாள் முதல்வர் திரு. நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், பெட்ரோல் விலை இன்னும் ஆறு மாதங்களில் 150 ரூபாயாகவும், சமையல் எரிவாயு விலை ஆயிரத்து 250 ரூபாயாக உயரும் என்று கூறினார். சட்டப்பேரவை முடிந்து 2 மாதங்களாகியும் எந்தக் கோப்பும் அதிகாரிகளிடம் இருந்து வரவில்லை என்றும், அறிவிப்புகள் நடைமுறைக்கு வரவில்லை எனவும் திரு. நாராயணசாமி சுட்டிக்காட்டினார்.