கேரளாவில் கனமழையின்போது திருமண மண்டபத்திற்கு செல்ல முடியாமல் தவித்த மணமக்கள் - சமையல் பாத்திரத்தையே படகாக கொண்டு இருவரும் பயணித்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரல்

Oct 19 2021 12:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரளாவில் கனமழையால் திருமண மண்டபத்திற்கு செல்ல முடியாமல் தவித்த மணமகனும், மணப்பெண்ணும், சமையலுக்‍கு பயன்படும் அண்டாவை படகாக பயன்படுத்தி, திருமண மண்டபத்தை சென்றடைந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கடந்த சில வாரங்களாகவே கேரளாவை கனமழை புரட்டிப்போட்டு வருகிறது. நிலச்சரிவு, வெள்ளம் என மக்‍கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆலப்புழாவில் திருமணத்திற்கு தயாரான மணமகனும், மணமகளும் மழை, வெள்ளம் காரணமாக மண்டபத்திற்கு செல்ல முடியாமல் தவித்தனர். வெள்ளம் சூழந்ததால் திருமண மண்டபத்துக்கு அவர்களால் செல்ல முடியவில்லை. சுகாதாரப் பணியாளர்களான அவர்கள் இருவரும் பின்னர் சமயோசிதமாக முடிவெடுத்து, சமையல் அண்டாவை ஒரு படகு போல மாற்றி அதில் அமர்ந்து பயணித்தனர். அலுமினிய பாத்திரத்தின் உதவியுடன் அவர்கள் இருவரும் வெள்ளத்தை கடந்து சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மணமக்‍கள் திருமண மண்டபத்தை அடைந்ததும், திட்டமிட்டபடி அவர்களின் திருமணம் நடைபெற்றது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00