லக்கிம்பூர் விவசாயிகள் மீது கார் ஏற்றியதால் ஏற்பட்ட வன்முறை வழக்கு : 4 பேர் கைது - துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல்
Oct 19 2021 9:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விவசாயிகள் மீது கார் ஏற்றியதால் ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்கில் மேலும் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் லக்கிபூரில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது உ.பி. துணை முதல்வர், மத்திய இணை அமைச்சர் உடன் வந்த கார் விவசாயிகள் கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் இரண்டு விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதன்பின் வன்முறை ஏற்பட்டது. மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன. இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய சுமித் ஜெய்ஸ்வால், ஷிஷுபால், நந்தன் சிங் பிஷ்ட், சத்ய பிரகாஷ் திரிபாதி ஆகிய 4 பேர போலீசார் நேற்று இரவு கைது செய்துள்ளனர். இதில் திரிபாதியிடம் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து ரகசிய இடத்தில் வைத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.