மகாராஷ்டிராவில் 22-ம் தேதி முதல் புதிய ஊரடங்கு தளர்வுகள் அமல் - கேளிக்கை பூங்காக்களை திறக்க அனுமதி
Oct 19 2021 12:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகாராஷ்டிராவில் 22-ம் தேதி முதல் கேளிக்கை பூங்காக்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வு, கொரோனா பாதிப்பு குறித்து அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், உணவு விடுதிகள் மற்றும் கடைகளின் நேரம் நீட்டிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், 22-ம் தேதி முதல் கேளிக்கை பூங்காக்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எனினும், தண்ணீர் தொடர்பான விளையாட்டுக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.