கர்நாடகாவில் 25-ம் தேதி முதல் 1-ம் முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் - சமூக இடைவெளியை கடைபிடித்து வகுப்புகளை நடத்த அறிவுறுத்தல்
Oct 19 2021 7:44AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடகாவில் வரும் 25-ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, சமூக இடைவெளியை கடைபிடித்து வகுப்புகளை நடத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் பெற்றோரின் ஒப்புதல் கடிதம் அவசியமெனவும் கூறப்பட்டுள்ளது.