காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம், வரும் 27-ந் தேதி நடைபெறும் என அறிவிப்பு - காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தை நாளை காணொலி மூலம் நடத்த ஏற்பாடு

Sep 22 2021 4:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம், வரும் 27-ந் தேதி நடைபெறவுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 13-வது கூட்டம் கடந்த மாதம் 31-ந் தேதி நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற இந்தக்‍ கூட்டத்தில், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய 4 மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரை கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும் என்றும் வலியுறுத்திய தமிழக அரசு, மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பும் தெரிவித்தது.

இந்த கூட்டத்தின்போது அடுத்த கூட்டம் வரும் 24-ந் தேதி நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில், வருகிற 27-ந் தேதி நடைபெறும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் நாளை காணொலி மூலம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00