காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம், வரும் 27-ந் தேதி நடைபெறும் என அறிவிப்பு - காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தை நாளை காணொலி மூலம் நடத்த ஏற்பாடு
Sep 22 2021 4:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம், வரும் 27-ந் தேதி நடைபெறவுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 13-வது கூட்டம் கடந்த மாதம் 31-ந் தேதி நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய 4 மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரை கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும் என்றும் வலியுறுத்திய தமிழக அரசு, மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பும் தெரிவித்தது.
இந்த கூட்டத்தின்போது அடுத்த கூட்டம் வரும் 24-ந் தேதி நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில், வருகிற 27-ந் தேதி நடைபெறும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் நாளை காணொலி மூலம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.