மேற்குவங்கத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை- மழை நீரில் மின்கசிவு ஏற்பட்டு 4 பேர் பலி

Sep 22 2021 3:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

மேற்குவங்கத்தில் கனமழை பெய்துவரும் நிலையில், வெள்ளத்தில் மின்கசிவு ஏற்பட்டு 4 பேர் பலியாகினர்.

மேற்குவங்கம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதலே கனமழை பெய்து வருகிறது. இதனால், தாப்சியா, உல்டாதங்கா, பால்மர் பசார், ஜோத்பூர் பூங்கா உள்ளிட்ட இடங்கள் வெள்ளக்‍காடாக காட்சியளிக்‍கின்றன. கொல்கத்தாவின் பெரும்பாலான பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி, குடியிருப்புகளுக்‍குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்‍கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பல்வேறு இடங்களில் வெள்ள நீருக்கு மத்தியில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்‍கும் மக்‍கள் படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்‍கு வெளியேற்றப்பட்டு வருகின்றன.

இதனிடையே, மேற்குவங்கத்தில் மழை வெள்ளத்தில் மின்கசிவு ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்தனர். கர்தா என்ற இடத்தில் அரசு குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்த நபர், மனைவி மற்றும் மகனுடன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். திட்டாகார்க்‍ என்ற இடத்தில் 15 வயது சிறுவன் ஒருவன் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக பலியாகினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00