புதுச்சேரியில் செடியின் கிளைகளிலிருந்து வேர்களை உருவாக்கி புதிய செடி உருவாக்கம் : இளம் வேளாண் விஞ்ஞானி சாதனை
Aug 9 2021 12:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியை சேர்ந்த இளம் வேளாண் விஞ்ஞானி, செடியின் கிளைகளில் இருந்து எண்ணற்ற வேர்களை உருவாக்கி, தொற்றில்லா புதிய செடிகளை உருவாக்க முடியும் என்பதை கண்டுபிடித்துள்ளார்.
புதுச்சேரி கூடப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீலட்சுமி. விவசாயியான இவர், பல்வேறு ஆராய்ச்சி மூலம், தரமான அதிக லாபம் தரக்கூடிய பயிர்களையும், புதிய ரகங்களையும் உருவாக்கி வருகிறார். இவர் தற்போது, செடியின் கிளைகளில் இருந்து எண்ணற்ற வேர்களை உருவாக்கி அதிலிருந்து தொற்றில்லா செடிகளை உருவாக்கி அசத்தியுள்ளார். இதனை, நேரில் பார்வையிட்டு அறிமுகம் செய்து வைத்த புதுச்சேரி சபாநாயகர் திரு.ஏம்பலம் செல்வம், வேளாண் விஞ்ஞானி ஸ்ரீலட்சுமியை பாராட்டினார். இளம் வேளாண் விஞ்ஞானியின் இந்த முயற்சி, விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.