ஜம்மு காஷ்மீரின் பந்திப்பூர் மாவட்டத்தில் காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
Jul 24 2021 1:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு காஷ்மீரின் பந்திப்பூர் மாவட்டத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பந்திப்பூர் மாவட்ட காவல்துறைக்கு தீவிரவாதிகள் குறித்து ரகசிய தகவல் கிடைத்த நிலையில், ஷோக்பாபா வனப்பகுதியில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகளைச் சுற்றிவளைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். தீவிரவாதிகளும் போலீசார் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பலியான இருவரைப் பற்றியும் எந்த தகவலும் இல்லை என்பதால் அவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், அவர்களிடமிருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.