குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி வரும் செப்டம்பர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரலாம் - எய்ம்ஸ் இயக்குனர் தகவல்
Jul 24 2021 2:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி வரும் செப்டம்பர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரலாம் என எய்ம்ஸ் இயக்குனர் திரு. ரந்தீப் குலேரியா கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த திரு. ரந்தீப் குலேரியா, கொரோனா தொற்று பரவல் சங்கிலியை உடைப்பதில் குழந்தைகளுக்கான தடுப்பூசி முக்கிய பங்காற்றும் என தெரிவித்தார். குழந்தைகளுக்கான ஸைடஸ் கெடிலா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி சோதனைகள் முடிவடைந்து, அவசரகால ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும், ஆகஸ்டு இறுதி அல்லது செப்டம்பர் மாத தொடக்கத்தில் கோவாக்சின் சோதனைகளும் நிறைவடைந்து அதற்கும் ஒப்புதல் கிடைக்கலாம் என்றும் அவர் கூறினார். குழந்தைகளுக்கான ஃபைசர் நிறுவன தடுப்பூசிக்கு ஏற்கனவே அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும், எனவே செப்டம்பரில் குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கலாம் என்றும் திரு. குலேரியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.