கர்நாடக பாஜகவில் நிலவும் உட்கட்சி பூசல் - முதலமைச்சர் எடியூரப்பா நாளை மறுதினம் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்
Jul 24 2021 12:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடக முதலமைச்சர் திரு. எடியூரப்பா நாளை மறுதினம் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
கர்நாடகாவில் 2007-ம் ஆண்டு திரு. குமாரசாமி தலைமையிலான ஜனதாதள கட்சியுடன் கூட்டணி அமைத்து 7 நாட்கள் மட்டுமே திரு. எடியூரப்பா முதலமைச்சர் பதவியில் நீடித்தார். 2008-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் சுயேட்சைகளின் ஆதரவுடன் மூன்றரை ஆண்டுகள் பதவியிலிருந்த திரு. எடியூரப்பா 2-வது முறையாக பதவியை ராஜினாமா செய்தார். 2018 சட்டமன்ற தேர்தலில் 104 இடங்களில் வென்றதையடுத்து 3-வது முறையாக முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற திரு. எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் 3 நாட்களில் பதவி விலகினார். 2019-ம் ஆண்டு 4-வது முறையாக கர்நாடக முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற திரு. எடியூரப்பா வரும் 26-ம் தேதியுடன் 2 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இந்நிலையில், திரு. எடியூரப்பாவை பதவியிலிருந்து நீக்கி புதிய முதலமைச்சரை தேர்வு செய்ய பா.ஜ.க. தலைமை கடந்த சில மாதங்களாகவே திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, பா.ஜ.க. மேலிட உத்தரவின் பேரில், நாளை மறுதினம் திரு. எடியூரப்பா 4-வது முறையாக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.