கர்நாடக பாஜகவில் நிலவும் உட்கட்சி பூசல் - முதலமைச்சர் எடியூரப்பா நாளை மறுதினம் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்

Jul 24 2021 12:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடக முதலமைச்சர் திரு. எடியூரப்பா நாளை மறுதினம் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

கர்நாடகாவில் 2007-ம் ஆண்டு திரு. குமாரசாமி தலைமையிலான ஜனதாதள கட்சியுடன் கூட்டணி அமைத்து 7 நாட்கள் மட்டுமே திரு. எடியூரப்பா முதலமைச்சர் பதவியில் நீடித்தார். 2008-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் சுயேட்சைகளின் ஆதரவுடன் மூன்றரை ஆண்டுகள் பதவியிலிருந்த திரு. எடியூரப்பா 2-வது முறையாக பதவியை ராஜினாமா செய்தார். 2018 சட்டமன்ற தேர்தலில் 104 இடங்களில் வென்றதையடுத்து 3-வது முறையாக முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற திரு. எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்‍க முடியாமல் 3 நாட்களில் பதவி விலகினார். 2019-ம் ஆண்டு 4-வது முறையாக கர்நாடக முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற திரு. எடியூரப்பா வரும் 26-ம் தேதியுடன் 2 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இந்நிலையில், திரு. எடியூரப்பாவை பதவியிலிருந்து நீக்‍கி புதிய முதலமைச்சரை தேர்வு செய்ய பா.ஜ.க. தலைமை கடந்த சில மாதங்களாகவே திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, பா.ஜ.க. மேலிட உத்தரவின் பேரில், நாளை மறுதினம் திரு. எடியூரப்பா 4-வது முறையாக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00