புதுச்சேரியில் மூதாட்டியிடம் செயின் பறித்துச் சென்ற நபர் கைது
Jul 24 2021 12:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில், மூதாட்டியிடம் தங்க செயின் பறித்து சென்ற இளைஞரை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, ரெட்டியார்பாளையம் பவழ நகரைச் சேர்ந்த ராஜவேனி என்ற மூதாட்டி தனது வீட்டில் இருந்தபோது, மர்மநபர் ஒருவர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்க செயினை பறித்துச்சென்றார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், செல்வகுமார் என்ற நபர், அவரது வீட்டின் மேல் பகுதிக்கு பெயிண்ட் அடிப்பதற்காக வந்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், குற்றத்தில் ஈடுபட்டதை ஒத்துக்கொண்டார்.