நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கருத்து
Jul 24 2021 12:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மிகவும் அச்சுறுத்தலாக இருப்பதாக முன்னாள் பிரதமர் திரு. மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
பொருளாதார தாராளமயமாக்கலின் 30-ம் ஆண்டு நிறைவையொட்டி, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திரு. மன்மோகன் சிங், கடந்த 1991-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைக் காட்டிலும் தற்போதைய நெருக்கடி அச்சுறுத்தலாக இருப்பதாகத் தெரிவித்தார். அனைத்து இந்தியர்களுக்கும் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் பெருமையுடன் திரும்பிப்பார்க்க வைப்பதாக கூறிய திரு. மன்மோகன் சிங், கொரோனாவால் ஏற்பட்ட பேரழிவு மற்றும் ஆயிரக்கணக்கான இந்தியர்களின் உயிரிழப்பு தமக்கு மனவேதனையை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.