ஆபாச படங்களை எடுத்து மொபைல் செயலிகள் மூலம் வெளியிட்டதாக புகார் - பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரிடம், மும்பை போலீசார் விசாரணை
Jul 24 2021 11:38AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆபாச வீடியோ வழக்கில், பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியிடம், மும்பை போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, ஆபாச படங்களை எடுத்து, அதனை மொபைல் செயலிகள் மூலம் வெளியிட்ட புகாரில், மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராஜ் குந்த்ராவை காவலில் எடுத்து விசாரணை நடத்திய போலீசார், அவரை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரிடம், வரும் 27-ம் தேதி வரை விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதை தொடர்ந்து, ஜூகுவில் உள்ள ஷில்பா ஷெட்டி வீட்டுக்கு, ராஜ் குந்த்ராவுடன் சென்ற போலீசார், அங்கு பல மணி நேரம் சோதனை நடத்தியதுடன், நடிகை ஷில்பா ஷெட்டியிடமும் விசாரணை நடத்தினர். மும்பை போலீசார் இந்த நடவடிக்கை, பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.