மஹாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்துவரும் கனமழை, : வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் ரத்து
Jul 24 2021 11:25AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மஹாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில், கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் வெள்ளமும், நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது. ரயில் நிலையங்கள், தண்டவாளங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், கர்நாடகா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து, வடமாநிலங்களுக்கு செல்லும் 30க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில்கள் நேரம் மற்றும் வழித்தட மாற்றம் செய்யப்பட்டுள்ளன.