மஹாராஷ்ட்ராவில் பெய்யும் கனமழையால் மாநிலமே வெள்ளக்‍காடாக காட்சியளிக்‍கிறது - வெள்ளத்தில் சிக்‍கி உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 136-ஆக அதிகரிப்பு

Jul 24 2021 12:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

மஹாராஷ்ட்ராவில் விடாமல் கொட்டும் கனமழையால் மாநிலமே வெள்ளக்‍காடாக காட்சியளிக்‍கிறது. கனமழைக்‍கு உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 136-ஆக அதிகரித்துள்ளது.

மஹாராஷ்ட்ராவில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் சிக்கி தவிக்கும் மக்களை இரவு பகல் பாராது தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்டு வருகின்றனர். குறிப்பாக ரத்னகிரி மாவட்டத்தின் சிப்லுன் நகரம் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கிவிட்டது. மும்பை, பால்கர், கோலாப்பூர் என பல மாவட்டங்களில் இன்றும் கனமழை தொடர்கிறது. புனே அருகே கடக்வாஸ்லா அணைக்கு வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்ததால், அணை திறக்கப்பட்டது. கனமழையால் மும்பை - கோவா நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. கோவாவில் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. Mahadayi நதிநீர் ஊருக்குள் புகுந்ததில், நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.

இதனிடையே மஹாராஷ்ட்ராவில் கனமழை மற்றும் நிலச்சரிவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 136-ஆக அதிகரித்துள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் ராய்காட் மற்றும் சதாரா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. 80 ஆயிரத்துக்‍கும் அதிகமான மக்‍கள் முகாம்களில் தங்க வைக்‍கப்பட்டுள்ளனர்.

மஹாராஷ்ட்ராவில் இன்றும் மிக கனமழைக்‍கான ரெட் அலர்ட் 6 மாவட்டங்களுக்‍கு விடுக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00