உத்தரப்பிரதேச போலீசாரால் வழக்கு விசாரணைக்காக ட்விட்டர் நிறுவனத்தின் இந்தியத்தலைவர் மனீஷ் மகேஸ்வரி நேரில் செல்லத் தேவையில்லை - கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு

Jul 23 2021 7:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தரப்பிரதேச போலீசாரால் வழக்கு விசாரணைக்காக ட்விட்டர் நிறுவனத்தின் இந்தியத்தலைவர் மனீஷ் மகேஸ்வரி, நேரில் செல்லத் தேவையில்லை என கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காசியாபாத்தில் இஸ்லாமிய முதியவர் ஒருவர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்தின் இந்தியத் தலைவர் மனீஷ் மகேஷ்வரி மீது காசியாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு, அவர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பினர். தான் பெங்களூருவில் இருப்பதால் இணைய வழியில் ஆஜராவதாக, மனீஷ் மகேஸ்வரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவர் விசாரணைக்காக உத்தரப்பிரதேசம் செல்லத் தேவையில்லை என உத்தரவிட்டது. மேலும், மனிஷ் மகேஸ்வரி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறான நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இது அதிகார துஷ்பிரயோகம் எனவும் கண்டனம் தெரிவித்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00