குழந்தைகளுக்கான கோவாக்சின் இரண்டாம் டோஸ் தடுப்பூசி சோதனை - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அடுத்த வாரம் தொடங்கும் என தகவல்
Jul 23 2021 2:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குழந்தைகளுக்கான கோவாக்சின் இரண்டாம் டோஸ் தடுப்பூசி சோதனை, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அடுத்த வாரம் தொடங்கும் என தகவல் வெளியாகிவுள்ளது.
18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி சோதனை நடத்தும் மையங்களில் ஒன்றாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவனை உள்ளது. அங்கு முதலில் 12 முதல் 18 வயது பிரிவினருக்கு கோவாக்சின் தடுப்பூசி சோதனை நடத்தப்பட்டது. அதன்பின்னர் 6 முதல் 12 வயதினருக்கு முதல்கட்ட சோதனை முடிந்து, இரண்டாம் டோஸ் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 2 முதல் 6 வயதுள்ள குழந்தைகளுக்கு முதல் கட்ட சோதனை முடிந்து, வரும் வாரம் 2-ம் கட்ட சோதனை தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 2 முதல் 18 வயது வரை உள்ளவர்களை 3 பிரிவுகளாக பிரித்து நடத்தப்படும் இந்த சோதனை முடிவுகள் அனைத்தும் ஒரு மாதத்திற்குள் கிடைத்து விடும் என கூறப்படுகிறது.