சுருக்குமடி வலையை பயன்படுத்த புதுச்சேரி மீனவர்கள் எதிர்ப்பு - படகுகளில் கருப்பு கொடி ஏந்தியபடி கடலில் இறங்கி ஏராளமானோர் போராட்டம்
Jul 23 2021 2:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில், சுருக்குமடி வலையை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து 500க்கும் மேற்பட்ட மீனவர்கள், படகுகளுடன் கடலில் இறங்கி, கருப்பு கொடி ஏந்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் காலாப்பட்டு முதல், மூர்த்தி குப்பம் வரை 18 மீனவ கிராமங்கள் உள்ளன. மீனவர்களில் ஒருதரப்பினர், சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று அண்மை காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதனை ஏற்று, அரசு தரப்பில் வாய்மொழியாக அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த விசைப்படகு மீனவர்கள், சுருக்குமடி வலைக்கு அனுமதி அளிக்க கூடாதென எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள 18 மீனவ கிராமத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மீனவர்கள், 200க்கும் மேற்பட்ட படகுகளுடன் கடலில் இறங்கி, கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.