காஷ்மீர் மாநிலம் சோப்பூரில் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் - 2 தீவிரவாதிகள் பலி
Jul 23 2021 11:32AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஷ்மீர் மாநிலம் சோப்பூரில் நடந்த என்கவுன்டரில் 2 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளை, பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். சுட்டுக்கொல்லப்பட்ட 2 பேரில் பயஸ் வார் என்பவர் காஷ்மீரில் நடந்த பல தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையவர் என ராணுவம் தெரிவித்துள்ளது. இதனிடையே காஷ்மீர் மாநிலம் கனசாக் வான்பரப்பில் வெடிபொருட்களுடன் பறந்த டிரோனை, காவல்துறையினர் சுட்டு வீழ்த்தினர்.