கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை - மேற்குவங்கம் மாநிலத்தில் நாளை முதல் வரும் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு
May 15 2021 4:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மேற்குவங்கம் மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாளை முதல் வரும் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மேற்குவங்கத்தில் நாளை காலை 6 மணி முதல் வரும் 30-ம் தேதி மாலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. முழு ஊரடங்கு காலத்தில், அவசர சேவைகள் தவிர அனைத்து அரசு துறைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தனியார் அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட தடைவிதிக்கப்பட்டுள்ளது. பால், மருந்தகம், பெட்ரோல் நிலையம் உள்ளிட்டவை வழக்கப்போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சில்லறைக் கடைகள் காலை 7 மணி முதல் 10 மணி வரையும், பேக்கரி மற்றும் இறைச்சிக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையும் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ சேவை, உள்ளூர் ரயில் மற்றும் பேருந்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தனியார் வாகனங்களை, அவசர அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.