புதுச்சேரியில் ஒரே நாளில் 1,598 பேருக்கு கொரோனா தொற்று - பலி எண்ணிக்கை 1,119-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல்
May 15 2021 1:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் ஒரே நாளில் ஆயிரத்து 598 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82 ஆயிரத்து 545-ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை மற்றும் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டோர் எண்ணிக்கை 17 ஆயிரத்து 228ஆக உள்ளது. 64 ஆயிரத்து 198 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து பலி எண்ணிக்கை ஆயிரத்து 119-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.