கர்நாடகாவில் ஊரடங்கால் சந்தையில் தேங்கிய காய்கறிகள் - ரூ.15 லட்சம் மதிப்பிலான காய்கறிகள் அழுகி சேதம்
May 15 2021 12:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முழு ஊரடங்கு காரணமாக கர்நாடக மாநிலம் சிவமோகாவில் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான காய்கறிகள் அழுகி வீணானது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதையடுத்து பல்வேறு மாநிலங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. அந்த வகையில் கர்நாடக மாநிலத்திலும் 2 வார முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் சிவமோகாவில் உள்ள காய்கறி சந்தையில் தேங்கியிருந்த காய்கறிகள் அழுகி வீணானது. பாழான காய்கறிகளின் மதிப்பு 15 லட்சம் ரூபாய் என அப்பகுதி காய்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.