இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,890 பேர் கொரோனாவிற்கு பலி - ஒரே நாளில் 3 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு பாதிப்பு
May 15 2021 11:25AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 66 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 ஆயிரத்து 890 பேர் தொற்றுக்கு பலியாகிவுள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 கோடியே 43 லட்சத்து 72 ஆயிரத்து 907-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பை பொறுத்தவரை, கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 890 பேர் மரணமடைந்துள்ளதாகவும், மொத்த பலி எண்ணிக்கை 2 லட்சத்து 66 ஆயிரத்து 207-ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 36 லட்சத்து 73 ஆயிரத்து 802 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை 2 கோடியே 4 லட்சத்து 32 ஆயிரத்து 898 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.