கேரளாவில் முழு ஊரடங்கு 23-ஆம் தேதி வரை நீட்டிப்பு - திருவனந்தபுரம், மலப்புரம், எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்
May 15 2021 10:10AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் அமலில் உள்ள முழு ஊரடங்கை, வரும் 23-ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில முதல்வர் திரு.பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா பரவலின் இரண்டாவது அலை கேரளாவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அங்கு கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனைத் தொடர்ந்து கடந்த மே 8 தேதி முதல் 9 நாள்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் நாளையுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வரவுள்ள நிலையில் அதனை மேலும் நீட்டித்து மாநில முதல்வர் திரு.பினராயி விஜயன் அறிவித்துள்ளார். அதன்படி வரும் 23-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ள அவர், அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். கொரோனா அதிகம் பாதித்துள்ள திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம் மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.