18 வயதுக்கு மேற்பட்‌டவர்கள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு, வரும் 24-ம் தேதி முதல் கோவின் வலைதளத்தில் பதிவு செய்யலாம் - மத்திய அரசு அறிவிப்பு

Apr 22 2021 5:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாடு முழுவதும், 18 வயதுக்கு மேற்பட்‌டவர்கள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு, வரும் 24-ம் தேதி முதல் கோவின் வலைதளத்தில் பதிவு செய்யலாம் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில், ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக, மருத்துவப் பணியாளர்களுக்கும், இரண்டாம் கட்டமாக, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் உள்ளவர்களுக்கும், மூன்றாம் கட்டமாக, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றால், நாட்டில் இளம் வயதினரே அதிகம் பாதிக்கப்படுவதால், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதையடுத்து, மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி போடுவதற்கு, வரும் 24-ம் தேதி முதல் கோவின் வலைதளத்தில், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பதிவு செய்யலாம் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. ‍மே 1-ம் தேதி முதல் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி போடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00