இந்தியாவில் கொரோனா தொற்றை தடுக்கும் மற்றொரு புதிய தடுப்பூசி - ஹைதராபாத் நிறுவனம் தீவிரம்
Apr 22 2021 5:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸைத் தடுப்பதற்கான மற்றொரு புதிய தடுப்பூசியை ஹைதராபாத் நிறுவனம் உருவாக்கி வருகிறது.
இந்தியாவில் கொரோனா நோயைத் தடுக்கும் வகையில், கோவாக்ஸின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. எனினும், தடுப்பூசிகளின் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய அரசு, ரஷ்யாவில் இருந்து 'ஸ்புட்-னிக் 5' என்ற தடுப்பூசியை இறக்குமதி செய்து, அவசர தேவைக்கு பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸைத் தடுப்பதற்கான மற்றொரு புதிய தடுப்பூசியை ஹைதராபாத் நிறுவனம் உருவாக்கி வருகிறது. "Biological E"
என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியின் இரண்டு கட்ட பரிசோதனைகள் முடிவடைந்துள்ளன. இந்த தடுப்பூசியின் 3-வது கட்ட பரிசோதனையை "Biological E" என்ற நிறுவனம் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.