அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கேட்டுக்கொண்டதால் ஆக்சிஜன் பிரச்னை முடிவுக்கு வந்ததாக ஹரியானா முதல்வர் கத்தார் தகவல் - அடுத்த சில மணி நேரங்களுக்கு மட்டுமே ஆக்சிஜன் இருப்பதால், டெல்லி மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் சேர்ப்பு நிறுத்தம்
Apr 22 2021 5:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி முதலமைச்சர் திரு. அர்விந்த் கெஜ்ரிவால் இன்று தன்னுடன் பேசியதை தொடர்ந்து ஆக்சிஜன் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளதாக ஹரியான முதலமைச்சர் கத்தார் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, கடந்த ஒரு வாரமாக மருத்துவமனைகளும், டெல்லி அரசும், மீண்டும் மீண்டும் ஆக்சிஜன் கேட்டு மத்திய அரசை வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று, தன்னுடன் தொலைபேசியில் கேட்டுக்கொண்டதால், ஹரியானாவில் இருந்து டெல்லிக்கு வரும் ஆக்சிஜன் பிரச்னை முடிவுக்கு வந்ததாக, ஹரியானா முதலமைச்சர் கத்தார் தெரிவித்துள்ளார். இந்த நிலையிலும், அடுத்த சில மணி நேரங்களுக்கு மட்டுமே ஆக்சிஜன் உள்ளதால் கொரோனா நோயாளிகளை சிகிச்சைக்கு சேர்ப்பதை நிறுத்தி வைத்துள்ளதாக, டெல்லியிலுள்ள பல முக்கிய மருத்துவமனைகளின் தலைமை மருத்துவர்கள் வேதனையோடு தெரிவித்துள்ளனர்.