கேரளாவில் சோலார் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சரிதா நாயர் - செக் மோசடி விவகாரத்திலும் கைது
Apr 22 2021 2:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் சோலார் முறைகேடு வழக்கில் சிக்கிய முக்கிய புள்ளியான சரிதா நாயர், காசோலை மோசடி வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது நடைபெற்ற சோலார் பேனல் மோசடியில், முக்கியக் குற்றவாளியாக சரிதா நாயர் பெயர் பெரிய அளவில் பேசப்பட்டது. சரிதா நாயருக்கு இருக்கும் அரசியல் தொடர்புகள் குறித்த தகவல்கள் வெளியாகி கேரளத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சோலார் வழக்கு, தமிழ்நாட்டில் கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நடந்திருப்பதாகப் புகார் எழுந்தது.
இந்நிலையில், சோலார் கம்பெனியின் பெயரில் கேரள மாநிலம், கோழிக்கோட்டைச் சேர்ந்த அப்துல் மஜித் என்பவரிடம் 42 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக, சரிதா நாயர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான கடந்த மாதம் நடைபெற்ற விசாரணையில் சரிதா நாயர் ஆஜராகவில்லை. இதனையடுத்து, அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. அவர் தாமாக முன்வந்து ஆஜராக வேண்டும் என்றும், அப்படி ஆஜராகாமல் இருந்தால் கைதுசெய்து ஆஜராக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டும் சரிதா நாயர் ஆஜராகததால், அவரை போலீசார் இன்று கைது செய்தனர்.