இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது - கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 104 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு
Apr 22 2021 1:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 104 பேர் கொரோனாவுக்கு பலியாகிவுள்ளனர்.
இந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 14 ஆயிரத்து 835 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 கோடியே 59 லட்சத்து 30 ஆயிரத்து 965-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பை பொறுத்தவரை, கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 104 பேர் மரணமடைந்து உள்ளனர். இவர்களுடன் சேர்த்து மொத்த பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 657-ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 22 லட்சத்து 91 ஆயிரத்து 428 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.