அமெரிக்கா தலைமையில் நடைபெறும் சர்வதேச பருவநிலை மாநாடு - பிரதமர் நரேந்திர மோடி இன்று, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் உரை
Apr 22 2021 4:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்கா தலைமையில் நடைபெறும் சர்வதேச பருவநிலை மாநாட்டில், பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் உரையாற்றுகிறார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பருவநிலை மாற்றம் தொடர்பாக, இரண்டு நாள் சர்வதேச மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளார். இன்று தொடங்கும் இம்மாநாட்டில், இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட, 40 நாடுகளின் தலைவர்கள், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்கின்றனர். பிரதமர் திரு.மோடி, இந்திய நேரப்படி, இன்று மாலை, 5.30 மணியில் இருந்து 7.30 மணி வரை, மாநாட்டில் உரையாற்ற உள்ளார். உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து, "Our Collective Sprint to 2030" என்ற தலைப்பில் திரு.மோடி பேச உள்ளதாக, வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இம்மாநாட்டில், பருவநிலை மாற்றம், காற்று மாசுபாட்டை குறைக்கும் நடவடிக்கைகளுக்கான நிதியுதவி, தூய எரிசக்தி சார்ந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து, உலகத் தலைவர்கள் விவாதிக்க உள்ளனர். இதைத் தொடர்ந்து நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், வரும், நவம்பரில் நடைபெற உள்ள, ஐ.நா.,பருவ நிலை உச்சி மாநாட்டில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.