சீதாராம் யெச்சூரி மகன் ஆஷிஷ் யெச்சூரி கொரோனாவால் உயிரிழப்பு - மிகுந்த மனவேதனையுடன் மகனின் உயிரிழப்பு செய்தியை வெளியிடுவதாக டுவிட்டரில் உருக்கம்
Apr 22 2021 3:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. சீத்தாரம் யெச்சூரியின் மகன், ஆஷிஷ் யெச்சூரி கொரோனா தொற்றால் இன்று உயிரிழந்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. சீத்தாரம் யெச்சூரியின் மூத்த மகனான ஆஷிஷ் யெச்சூரி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து திரு.யெச்சூரி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தனது மகன் கொரோனாவுக்கு பலியானதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவிப்பதாகவும் திரு.யெச்சூரி உருக்கமாக பதிவு செய்துள்ளார். ஆஷிஷ் யெச்சூரி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அரசியல் கட்சி தலைவர்கள் பலர், திரு.சீதாராம் யெச்சூரிக்கும் ஆறுதல் கூறி வருகின்றனர். நாட்டின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான திரு.யெச்சூரியின் மகன் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.