கொரோனா தடுப்பூசி விலையேற்றத்தின் மூலம், நாட்டு மக்களுக்கு மோடி அரசு அநீதி இழைத்துள்ளது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
Apr 21 2021 3:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா தடுப்பூசி விலையேற்றத்தின் மூலம், நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அரசு அநீதி இழைத்துள்ளதாக, காங்கிரஸ் எம்.பி. திரு. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்து, சீரம் இந்தியா நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை, அந்நிறுவனம் இருமடங்கு அளவுக்கு உயர்த்தியுள்ளது. இதற்கு, பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தடுப்பூசி விலையேற்றம் குறித்து, காங்கிரஸ் எம்.பி. திரு. ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தடுப்பூசி விலையேற்றம் நாட்டின் பேரழிவு என தெரிவித்துள்ளார்.
விலையேற்றத்தின் மூலம் மத்திய பா.ஜ.க. அரசு நாட்டு மக்களுக்கு அநீதி இழைத்து விட்டதாகக் குற்றஞ்சாட்டிய திரு. ராகுல் காந்தி, இதன் மூலம் பிரதமர் மோடியின் நண்பர்கள் பயனடைவார்கள் என்றும் விமர்சித்துள்ளார்.