மேற்குவங்க சட்டமன்றத்திற்கு நாளை 6-ம் கட்டத் தேர்தல் : 43 தொகுதிகளுக்கு நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு
Apr 21 2021 1:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மேற்குவங்கத்தில், 43 தொகுதிகளுக்கான 6-ம் கட்டத் தேர்தல் நாளை நடைபெறுகிறது.
மேற்குவங்க சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், 43 தொகுதிகளுக்கு 6-வது கட்டதேர்தல் நாளை நடைபெறவுள்ளது. நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி இரவு 7 மணிவரை நடைபெறவுள்ளது. கொரோனா பரவல் காரணமாக வாக்காளர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வரும் 26-ந்தேதி 7-வது கட்டம் தேர்தலும், 29-ந்தேதி 8-வது கட்டத் தேர்தலும் நடைபெறவுள்ளன. 8 கட்ட தேர்தல் முடிவடைந்ததும், மே 2ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. அன்றைய தினம் தமிழகம், கேரளா உட்பட எஞ்சிய நான்கு மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.