கொரோனா வழிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் - ராம நவமி வாழ்த்து செய்தியில் பிரதமர் வேண்டுகோள்
Apr 21 2021 1:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ராம நவமி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளதுடன், கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் திரு. மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய ராம நவமி வாழ்த்துகள் என்றும், ஸ்ரீராமரின் அபரிமிதமான இரக்கம் நாட்டு மக்கள் மீது என்றென்றும் தொடரட்டும் என்றும் தெரிவித்துள்ளார். நாம் கண்ணியமான நடத்தையை பின்பற்ற வேண்டும் என்பதே ஸ்ரீராமரின் செய்தி என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் திரு. மோடி, இந்த கொரோனா நெருக்கடியில், வைரஸ் தொற்றைத் தவிர்க்க தடுப்பு நெறிமுறைகளை மக்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.