காங்கிரசில் இருந்தபோதே ராகுல் சிறிது அக்கறை காட்டியிருக்கலாம் - ராகுல்காந்தி விமர்சனத்திற்கு ஜோதிராதித்ய சிந்தியா பதிலடி
Mar 9 2021 5:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காங்கிரசில் இருந்தபோதே, திரு.ராகுல்காந்தி, தன் மீது சிறிது அக்கறை காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த திரு.ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் குறிப்பிடத்தகுந்த காங்கிரஸ் ஆளுமையாக இருந்த திரு.ஜோதிராதித்ய சிந்தியா, அக்கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்காததால், கடந்தாண்டு தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜ.கவில் இணைந்தார். இதன் காரணமாக மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து, பாஜக ஆட்சியை கைப்பற்றியது. இந்த நிலையில், ஜோதிராதித்ய சிந்தியாவால், பா.ஜ.கவில் கடைசி பெஞ்ச் மாணவனாகத்தான் இருக்க முடியும் என்றும், முதல்வராக நினைத்திருந்தால் அவர் காங்கிரஸிலேயே இருந்திருக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்.பி திரு.ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். பா.ஜ.க.வில் இருக்கும்வரை சிந்தியாவால் முதல்வராக முடியாது என்றும், தன் முதல்வர் கனவை நனவாக்க அவர் மீண்டும் காங்கிரசுக்கு திரும்புவார் என்றும் திரு.ராகுல்காந்தி விமர்சித்திருந்தார். இந்த விமர்சனத்திற்கு பதிலளித்துள்ள திரு.சிந்தியா, தான் காங்கிரசில் இருந்தபோது, திரு.ராகுல்காந்தி, இதேபோல் அக்கறை காட்டியிருந்தால் முடிவு வேறாக இருந்திருக்கும் என தெரிவித்துள்ளார்.