ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்‍கள் எதிர்ப்பால், உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் ராஜினாமா - ஆளுநர் பேபி ராணி மவுரியாவை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை வழங்கினார்

Mar 9 2021 4:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் திரு. திரிவேந்திர சிங் ராவத், இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். சொந்த கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்‍கள் அதிருப்தியால் பதவி விலகிய அவர், ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் உத்தரகாண்ட் மாநிலத்தில், அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், மு‌தலமைச்சராக இருந்த திரு. ‌திரிவேந்திர சிங் ராவத்தின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை எனவும், இவரது தலைமையில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்தால், நிச்சயம் கட்சி தோல்வியடையும் எனவும், அக்கட்சியைச் சேர்ந்த மாநில அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சிலர், கட்சி மேலிடத்திடம் புகார் அளித்தனர். இதுதொடர்பாக திரு. திரிவேந்திர சிங் ராவத் மற்றும் புகார் அளித்த பா.ஜ.க., எம்.எல்.ஏ.,க்களிடம், பா.ஜ.க. மேலிடம் விசாரணை நடத்தியது. இதனைத் தொடர்ந்து தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த திரு. திரிவேந்திர சிங் ராவத், ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பேபி ராணி மவுரியாவிடம் வழங்கினார். சட்டப்பேரவை தேர்தலை சந்திக்‍க மத்திய அமைச்சர் திரு. ரமேஷ் பொக்‍ரியாலை முதலமைச்சராக்‍க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00